உலகம்
50 வயது நபரின் ஆசன வாய் பகுதியில் சிக்கிய வாட்டர் பாட்டில்.. நடந்தவற்றை கேட்டு மருத்துவர்கள் அதிர்ச்சி!
ஈரான் நாட்டைச் சேர்ந்த 50 வயது நபருக்கு சில நாட்களாகச் சாப்பிட முடியாமலும், கழிவுகளை வெளியேற்ற முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது மனைவி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த நபருக்கு சிடி ஸ்கேன் எடுத்தபோது ஆசன வாய் பகுதியில் 19 சென்டிமீட்டர் அளவு கொண்ட சிறிய வாட்டர் பாட்டில் இருந்தை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் இது எப்படி அங்கு சென்றது என அந்த நபரின் மருத்துவர்கள் கேட்டுள்ளனர். இதற்கு அவர் முதலில் பதில் அளிக்க மறுத்துள்ளார். ஆனால் மருத்துவர்களின் விடாப்பிடியான கேள்விக்கு பிறகே நடந்தவற்றை அவர் கூறியுள்ளார்.
அந்த நபர் விளையாட்டாக ஆசன வாய் பகுதியில் வாட்டர் பாட்டிலை நுழைத்துள்ளார். கொஞ்சம் தூரம் சென்ற பிறகு எடுத்து விடலாம் என நினைத்துள்ளார். ஆனால் வாட்டர் பாட்டில் முழுவதும் உள்ளே நுழைந்து குடலில் சிக்கியுள்ளது. இதனால் அதை அவரால் வெளியே எடுக்க முடியவில்லை.
இது குறித்து வெளியே சொன்னால் அசிங்கமாக இருக்கும் என நினைத்த அவர் நடந்த வற்றை மனைவியிடம் கூட தெரிவிக்காமல் இருந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பிறகே அவரது மனைவிக்கு நடந்தவை தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த நபரின் ஆசன வாய் பகுதியில் சிக்கிய வாட்டர் பாட்டிளை மருத்துவர்கள் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். மேலும் அந்த நபருக்கு மனநல மருத்துவரிடம் ஆலோசனை வழங்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!