உலகம்
50 வயது நபரின் ஆசன வாய் பகுதியில் சிக்கிய வாட்டர் பாட்டில்.. நடந்தவற்றை கேட்டு மருத்துவர்கள் அதிர்ச்சி!
ஈரான் நாட்டைச் சேர்ந்த 50 வயது நபருக்கு சில நாட்களாகச் சாப்பிட முடியாமலும், கழிவுகளை வெளியேற்ற முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது மனைவி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த நபருக்கு சிடி ஸ்கேன் எடுத்தபோது ஆசன வாய் பகுதியில் 19 சென்டிமீட்டர் அளவு கொண்ட சிறிய வாட்டர் பாட்டில் இருந்தை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் இது எப்படி அங்கு சென்றது என அந்த நபரின் மருத்துவர்கள் கேட்டுள்ளனர். இதற்கு அவர் முதலில் பதில் அளிக்க மறுத்துள்ளார். ஆனால் மருத்துவர்களின் விடாப்பிடியான கேள்விக்கு பிறகே நடந்தவற்றை அவர் கூறியுள்ளார்.
அந்த நபர் விளையாட்டாக ஆசன வாய் பகுதியில் வாட்டர் பாட்டிலை நுழைத்துள்ளார். கொஞ்சம் தூரம் சென்ற பிறகு எடுத்து விடலாம் என நினைத்துள்ளார். ஆனால் வாட்டர் பாட்டில் முழுவதும் உள்ளே நுழைந்து குடலில் சிக்கியுள்ளது. இதனால் அதை அவரால் வெளியே எடுக்க முடியவில்லை.
இது குறித்து வெளியே சொன்னால் அசிங்கமாக இருக்கும் என நினைத்த அவர் நடந்த வற்றை மனைவியிடம் கூட தெரிவிக்காமல் இருந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பிறகே அவரது மனைவிக்கு நடந்தவை தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த நபரின் ஆசன வாய் பகுதியில் சிக்கிய வாட்டர் பாட்டிளை மருத்துவர்கள் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். மேலும் அந்த நபருக்கு மனநல மருத்துவரிடம் ஆலோசனை வழங்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
“சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!