உலகம்
பற்றி எரிந்த இரயில் தண்டவாளம்.. இரயில்கள் ரத்து.. அவசர நிலையை அறிவித்த இங்கிலாந்து அரசு! - காரணம் என்ன?
இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பநிலை அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 11ஆம் தேதி, லண்டனில் மரக்கட்டையிலான இரயில்வே தண்டவாள ஒன்று தீப்பற்றி எரிந்தது. இது தொடர்பான வீடியோவும், புகைப்படமும் வைரலானது.
இப்படி வரலாறு காணாத அளவுக்கு அங்கு வெப்பம் அதிகரித்துள்ளதால், இனி வரும் காலங்களில் இந்த வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை தொடும் என்பதால், அங்குள்ள மக்களுக்கு 2 நாட்களுக்கு (இன்று, நாளைி) அபாய எச்சரிக்கை விடுக்கும் விதமாக 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை மூலம் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு 38.7 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் இங்கிலாந்தில் பதிவானது. அதன்பிறகு தற்போது 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு இரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினால், அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமானதாக காணப்படுகிறது.
Also Read
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !