உலகம்
சிறுவனுக்கு 'பளார்' விட்ட பாகிஸ்தான் பெண் செய்தியாளர்.. வைரலாகும் வீடியோ.. இதுக்ககெல்லாமா அடிப்பாங்க!
பொதுவாக ஒரு பண்டிகையை கொண்டாடுகையில், பொது வெளியில் நின்று அந்த பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது என்று பொதுமக்களிடம் கருத்து கேட்டு செய்தி போடுவது வழக்கம்.
அந்த வகையில் இஸ்லாமிய பண்டிகையான பக்ரீத் கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்று பாகிஸ்தான் நாட்டிலுள்ள லாகூரில், மைரா ஹாஸ்மி பெண் செய்தியாளர் ஒருவர் பொது வெளியில் நின்று செய்தி வழங்கி கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த சிறுவன் ஒருவனின் கன்னத்தில் அந்த பெண் செய்தியாளர் 'பளார்' என்று அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், எதற்காக அந்த சிறுவனை அடித்தார் என்று பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து அந்த பெண் செய்தியாளர், தான் எதற்காக அந்த சிறுவனை அடித்தேன் என்று விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் வேலை செய்யும்போது தனக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அந்த சிறுவன் நடந்துகொண்டதாகவும், அருகிலிருந்த ஒரு குடும்பத்தை சிறுவன் தொந்தரவு செய்ததாகவும், முதலில் அன்பாக தெரிவித்ததாகவும், ஆனால் மீண்டும் மீண்டும் இடையூறு செய்ததால் கோபப்பட்டு அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
என்னதான் இருந்தாலும் அந்த சிறுவனை பொது வெளியில் வைத்து அடித்தது கண்டித்தக்கது என்று பலரும் இந்த பெண் செய்தியாளருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர் அறைந்த வீடியோவுடன், அவர் அளித்துள்ள விளக்கமும் வைரலாகி வருகிறது.
Also Read
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!