உலகம்
இந்திய மாணவர்கள் 5 பேர் பலி.. 2 பேருக்கு தீவிர சிகிச்சை : கனடாவில் நடந்த துயர சம்பவம்!
கனடாவில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோகித் சவுகான் மற்றும் பவன் குமார் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தைக் கனடா நாட்டிற்கான இந்தியத் தூதர் அஜய் பிஸாரியா உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேபோல் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கள் தெரிவித்து, மாணவர்களின் குடும்பத்திற்குத் தேவையான உதவி செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
சாலையில் மாணவர்கள் சென்ற வேன், முன்னே சென்ற ட்ராக்டரில் மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் போலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த மாணவர்களின் உடலை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.
Also Read
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!
-
SWAYAM செமஸ்டர் தேர்வு - அநீதியை உடனே சரிசெய்ய வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் MP கடிதம்!
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!