உலகம்
“ஆப்கானிஸ்தான் மக்களை காப்பாற்ற 600 மில்லியன் டாலர் தேவை” - ஐ.நா வேதனை!
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை முழுமையாக வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர். இதனால் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.
இதையடுத்து ஆப்கானிஸ்தானில் இனி தாலிபான்கள் ஆட்சிதான் என அறிவித்து அதற்காக முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் ஹசன் அகுந்த் தற்காலிக பிரதமராகவும், முல்லா கனி துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தற்காலிக அமைச்சரவையையும் தேர்வு செய்துள்ளனர். இதில் உள்துறை அமைச்சரான சிராஜுதீன் ஹக்கானி ஐ.நா.வால் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் இருக்கிறார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து மருத்துவம், சுகாதாரம், உணவு என அனைத்திற்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறது என ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், "ஆப்கானிஸ்தான் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு உணவு, மருந்து, தண்ணீர், சுகாதார வசதிகள் என அனைத்தும் தேவைப்படுகிறது. கொரோனா மற்றும் வறட்சியாலும் ஆப்கானிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பாதி மக்கள் தொகைக்கு உதவி தேவைப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்காக 600 மில்லியன் டாலர் திரட்ட முயன்று வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!