உலகம்
“ஆப்கானிஸ்தான் மக்களை காப்பாற்ற 600 மில்லியன் டாலர் தேவை” - ஐ.நா வேதனை!
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை முழுமையாக வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர். இதனால் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.
இதையடுத்து ஆப்கானிஸ்தானில் இனி தாலிபான்கள் ஆட்சிதான் என அறிவித்து அதற்காக முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் ஹசன் அகுந்த் தற்காலிக பிரதமராகவும், முல்லா கனி துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தற்காலிக அமைச்சரவையையும் தேர்வு செய்துள்ளனர். இதில் உள்துறை அமைச்சரான சிராஜுதீன் ஹக்கானி ஐ.நா.வால் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் இருக்கிறார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து மருத்துவம், சுகாதாரம், உணவு என அனைத்திற்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறது என ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், "ஆப்கானிஸ்தான் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு உணவு, மருந்து, தண்ணீர், சுகாதார வசதிகள் என அனைத்தும் தேவைப்படுகிறது. கொரோனா மற்றும் வறட்சியாலும் ஆப்கானிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பாதி மக்கள் தொகைக்கு உதவி தேவைப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்காக 600 மில்லியன் டாலர் திரட்ட முயன்று வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!