உலகம்
‘ட்ரம்ப் அமெரிக்காவின் தவறான அதிபர்’ - மிஷெல் ஒபாமா காட்டம்!
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவியான மிஷெல் ஒபாமா, டொனால்ட் ட்ரம்பை அவர்களுடைய நாட்டின் தவறான அதிபர் என விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிபர் ட்ரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடேன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஜோ பிடேனுக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் நடத்திய கூட்டத்தில் மிஷெல் ஒபாமா கடுமையாக ட்ரம்பை விமர்சித்துப் பேசினார். அமெரிக்க மக்கள் ட்ரம்பின் பிரிவினை அரசியலைப் புறந்தள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
“டொனால்ட் ட்ரம்ப் நம் நாட்டின் தவறான அதிபர். ஒரு தலைமையை அல்லது ஆற்றுப்படுத்தலை அல்லது நிலைமாறாத் தன்மையின் ஏதோ ஒரு சாயலை எதிர்பார்த்து நாம் வெள்ளை மாளிகையை நோக்கும்போது நமக்கு கிடைப்பதெல்லாம் பேரழிவு, பிரிவினை மற்றும் முழுக்க முழுக்க புரிந்துணர்வு இல்லாத உணர்வுதான் கிடைக்கிறது.” என மிஷெல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவரை முன்னாள் அதிபரின் மனைவி விமர்சித்தது இதுவே முதல் முறை. ட்ரம்பை தகுதி, குணம் மற்றும் அதிபர் பதவிக்கேற்ற பண்பார்ந்த தன்மை என எதுவும் இல்லாதவர் எனவும் மிஷெல் ஒபாமா விமர்சித்துள்ளார்.
Also Read
-
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?
-
வெளியான வாக்காளர் இறுதிப்பட்டியல்... உங்கள் பெயர் உள்ளதா? - முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்!
-
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி: இந்திய அணியில் மாற்றம் நிகழுமா? அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
-
“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!