உலகம்
“1.30 கோடி பேர் பாதிப்பு - 5.71 லட்சம் பேர் பலி” : உலக நாடுகளைச் சிதைக்கு கொரோனா தொற்று!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 13,039,853 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 571,659 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 3,413,995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 137,782 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் 1,866,176 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 72,151 பேர் பலியாகியுள்ளனர். முன்னதாக இரண்டாவது இடத்தில் இருந்த ரஷ்யா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது 4வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் பாதிக்கப்ப்பட்டோர் எண்ணிக்கை 727,162 ஆக உயர்ந்துள்ளது.
அதேப்போல் 4வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 879,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 22,687 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது முழுமையாக செய்துள்ளது ரஷ்யா. மேலும் இந்த சோதனை பாதுகாப்பானது என மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”