உலகம்
“புதிய அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளோம்” : கொரோனா அதிதீவிரமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பெரும் விஸ்ரூபம் எடுத்து வருகிறது. சீன தலைநகர் பெய்ஜ்ங்க் மற்றும் ஆஸ்திரேலியாவில் கொரோனா 2வது அலை உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 87 லட்சத்துக்கு 58 ஆயிரத்தை கடந்துள்ளது. 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி இருக்கின்றனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் உலக அளவில் முதல் முறையாக இந்த பாதிப்பு எண்ணிக்கை கூடியிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா, தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தீவிரமாகியுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது, “அமெரிக்கா, தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக பரவி வருகிறது.
இதனிடையே கொரோனா பாதிப்பைத் தடுக்கும் மருந்துகண்டுபிடிப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதனால் நாட்டு மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லது, உலக நாடுகள் பொருளாதாரத்தை மீட்க ஆர்வம் காட்டுகிறது. அதே நேரம் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருவதை கருத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!