உலகம்
“அமெரிக்காவில் இருந்து உங்கள் மக்களை அழைத்துச் செல்லுங்கள்” - விசா தடையை விதித்து மிரட்டும் ட்ரம்ப்!
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தங்கள் நாட்டுமக்களை திரும்ப அழைக்காத நாடுகளுக்கு விசா தடை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையோ 18 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதில், அதிகபடியான வைரஸ் பாதிப்பை கொண்டுள்ள நாடாக உள்ளது உலகின் வல்லரசான அமெரிக்கா உள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கையிலும், பாதிப்பு எண்ணிக்கையிலும் தற்போது அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்களை திரும்ப அழைக்காத நாடுகளுக்கு விசா தடையை டிசம்பர் 31ம் தேதி வரை விதித்து உத்தரவிட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆணையில், அமெரிக்காவில் பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் விதிமீறல்களில் ஈட்டுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு விதிகளை மீறுவோரை தத்தம் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதில் அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை செயலாளர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். இந்த ஆணை 7 நாட்களுக்குள் அமல்படுத்தப்படும் என்றும், அதற்கான பட்டியல் பாதுகாப்புத்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!