உலகம்
சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா : அரசின் முக்கிய பிரதிநிதிகளுக்கும் பரவி இருக்குமோ என அச்சம்!
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியா, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டன் சுகாதாரத்துறை துணை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.,யுமான நடீன் டோரீஸிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நடீன் டோரீஸே உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து நடீன் டோரீஸ் மருத்துவ சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், சமீபத்தில் அவரைச் சந்தித்த நபர்களை வரவழைத்து அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதிக்குமாறு பிரிட்டன் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் 6 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும், 382 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தச் சூழலில், 62 வயதான நடீன் டோரீஸ் பிரிட்டன் நாடாளுமன்ற விவாதம் மற்றும் மகளிர் தின நிகழ்ச்சிஆகியவற்றில் கலந்துக்கொண்டதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கும் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!