உலகம்
சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா : அரசின் முக்கிய பிரதிநிதிகளுக்கும் பரவி இருக்குமோ என அச்சம்!
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியா, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டன் சுகாதாரத்துறை துணை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.,யுமான நடீன் டோரீஸிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நடீன் டோரீஸே உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து நடீன் டோரீஸ் மருத்துவ சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், சமீபத்தில் அவரைச் சந்தித்த நபர்களை வரவழைத்து அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதிக்குமாறு பிரிட்டன் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் 6 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும், 382 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தச் சூழலில், 62 வயதான நடீன் டோரீஸ் பிரிட்டன் நாடாளுமன்ற விவாதம் மற்றும் மகளிர் தின நிகழ்ச்சிஆகியவற்றில் கலந்துக்கொண்டதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கும் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
Also Read
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!