உலகம்
“ஒரே நாளில் 242 பேர் பலி - 1,350 ஆக அதிகரித்த உயிரிழப்புகள்” : சீனாவை மிரட்டும் கொரோனா - அதிர்ச்சி தகவல்!
சீனாவில் 'கொரோனா' வைரஸ் வெகுவேகமாகப் பரவி வருவதால் இதுவரை 1,350 பேர் பலியாகியுள்ளனர் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனால், சீனாவின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் தொடங்கி, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரித்த லீ வெண்லியாங் என்ற மருத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சீனாவில் கடந்த 8-ம் தேதி வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர் எண்ணிக்கை 723 ஆக அதிகரித்த நிலையில் கடந்த 9-ம் தேதி 81 பேர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் ஹூபே நகரில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 1,350-ஐ கடந்துள்ளது என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 44,200க்கும் அதிகமானோருக்கு சீனா முழுவதும் வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதேபோன்று 14,840 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !