உலகம்
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த சீனா | ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை!
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய பா.ஜ.க அரசு பிரித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் பாகிஸ்தான், இவ்விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதனையடுத்து, இந்தியாவுடனான வர்த்தக மற்றும் வாணிப உறவை முறித்ததாக அறிவித்தது பாகிஸ்தான் அரசு. காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலையை கையாண்டுள்ளது எனக் கூறி அண்டை நாடான சீனாவின் உதவியை நாடியுள்ளது.
இதற்காக சீனா சென்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில் தங்களின் நிலைப்பாட்டு ஆதரவளிக்க வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கைக்கு சீன அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனை ஏற்று இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போலந்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்துகிறது.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!