உலகம்
‘டிரம்ப் வேண்டாம்’ - அமெரிக்க அதிபருக்கு எதிராக வெனிசுலா மக்கள் போராட்டம் : மீண்டும் ஒரு மக்கள் புரட்சி ?
லத்தின் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் குவைடோ, தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக பிரகடனம் செய்தார். பாராளுமன்றம் எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிபர் தேர்தலில் நிகோலஸ் வெற்றி பெற்றது செல்லாது என்றும், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் குவைடோ வலியுறுத்தி வருகிறார்.
குவைடோவுக்கு அமெரிக்கா தனது ஆதரவு தெரிவித்து, அவரை இடைக்கால அதிபராக அங்கீகரித்துள்ளது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த அதிபர் மதுரோ, அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக வெனிசுலாவுக்கு அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் இந்த தடைகளை மேலும் அதிகரித்தது. அமெரிக்காவில் உள்ள வெனிசுலா அரசு சொத்துக்கள் அனைத்தையும் முடக்குவதற்கான உத்தரவில் கடந்த 5-ம் தேதி அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதன்காரணமாக டிரம்புக்கு எதிராக வெனிசுலாவில் ஆளும் ஐக்கிய சோசலிச கட்சி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. ‘டிரம்ப் வேண்டாம்’ என்ற பெயரில் நாட்டின் முக்கிய நகரங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் லட்சக்கணக்கான வெனிசுலா மக்கள் பங்கேற்று கையெழுத்திட்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வெனிசுலா மக்கள் , மொத்தம் 13 மில்லியன் கையெழுத்துக்கள் இடப்பட்ட மனுக்களை ஒன்றிணைத்து, அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டத்தில் ஒப்படைக்க உள்ளதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!