உலகம்
ஹேக் செய்யப்பட்டது 100 மில்லியன் பயனாளர்களின் தரவுகள்... முன்னாள் அமேசான் பெண் ஊழியர் கைது...
100 மில்லியன் பயனாளர்களின் தரவுகளை ஹேக் செய்த முன்னாள் அமேசான் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கேபிடல் ஒன் என்ற நிதி நிறுவனத்தின் 100 மில்லியன் பயனாளர்களின் தரவுகளை ஹேக் செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஹேக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியாட்டிலைச் சேர்ந்த 33 வயதுடைய பைஜ் தாம்சன் என்ற பெண் அமெரிக்காவில் உள்ள 100 மில்லியன் மற்றும் கனடாவில் உள்ள 6 மில்லியன் கேப்பிடல் ஒன் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை ஹேக் செய்துள்ளார். ஆனால் அவர்களது கிரெடிட், டெபிட் கார்டுகளின் விவரங்களை ஹேக் செய்வதற்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பைஜ் தாம்சம் அமேசானின் இணைய பிரிவில் முன்பு பணிபுரிந்ததாகவும், தற்போது சியாட்டில் உள்ள வேரெஸ் கிடீஸ் என்ற சமூக வலைதள அமைப்பில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!