உலகம்
ஜப்பானில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்!
ஜப்பானின் வடக்குப் பகுதியில் சற்று முன்பு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
ஜப்பானின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் யமகட்டா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடற்பகுதியில் 7 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகவா பகுதியில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மடிந்து, அந்த நாடே கோரமுகமானது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்நிலையில் தற்போது அங்கு மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருப்பது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.
நிலநடுக்கம் தொடரும் ஆபத்து இருப்பதால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டு வருகிறது. பேரிடர் மீட்புக்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !