உலகம்
ஓடும் விமானத்தில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்தியருக்கு ஓராண்டு சிறை!
மும்பையிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு விமானத்தில் சென்றுள்ளார் மும்பையைச் சேர்ந்த ஹர்மன் சிங் (36).
விமானத்தில் அனைவரும் தூங்கும் சமயத்தில், ஹர்மன் சிங், தனது, இருக்கைக்கு பக்கத்தில் இருந்த இளம்பெண்ணுக்கு (20) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அச்சமடைந்த அந்த பெண் நகர முற்பட்டிருக்கிறார். ஆனால், ஹர்மன் சிங் விடாப்பிடியாக அப்பெண்ணை பிடித்துள்ளார். பின்னர் அந்த நபரிடம் இருந்து தப்பித்து விமானத்தில் உள்ள பணிப்பெண்ணிடம் புகார் அளித்துள்ளார்.
பிறகு, மான்செஸ்டர் விமான நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விமானம் தரையிறங்கியதும் ஹர்மன் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, தவறை ஒப்புக்கொண்ட ஹர்மன் சிங்குக்கு மான்செஸ்டர் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை அளித்தது. இதன் பிறகு ஹர்மன் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read
-
SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !