உலகம்
ஓடும் விமானத்தில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்தியருக்கு ஓராண்டு சிறை!
மும்பையிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு விமானத்தில் சென்றுள்ளார் மும்பையைச் சேர்ந்த ஹர்மன் சிங் (36).
விமானத்தில் அனைவரும் தூங்கும் சமயத்தில், ஹர்மன் சிங், தனது, இருக்கைக்கு பக்கத்தில் இருந்த இளம்பெண்ணுக்கு (20) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அச்சமடைந்த அந்த பெண் நகர முற்பட்டிருக்கிறார். ஆனால், ஹர்மன் சிங் விடாப்பிடியாக அப்பெண்ணை பிடித்துள்ளார். பின்னர் அந்த நபரிடம் இருந்து தப்பித்து விமானத்தில் உள்ள பணிப்பெண்ணிடம் புகார் அளித்துள்ளார்.
பிறகு, மான்செஸ்டர் விமான நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விமானம் தரையிறங்கியதும் ஹர்மன் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, தவறை ஒப்புக்கொண்ட ஹர்மன் சிங்குக்கு மான்செஸ்டர் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை அளித்தது. இதன் பிறகு ஹர்மன் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!