உலகம்
ஓடும் விமானத்தில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்தியருக்கு ஓராண்டு சிறை!
மும்பையிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு விமானத்தில் சென்றுள்ளார் மும்பையைச் சேர்ந்த ஹர்மன் சிங் (36).
விமானத்தில் அனைவரும் தூங்கும் சமயத்தில், ஹர்மன் சிங், தனது, இருக்கைக்கு பக்கத்தில் இருந்த இளம்பெண்ணுக்கு (20) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அச்சமடைந்த அந்த பெண் நகர முற்பட்டிருக்கிறார். ஆனால், ஹர்மன் சிங் விடாப்பிடியாக அப்பெண்ணை பிடித்துள்ளார். பின்னர் அந்த நபரிடம் இருந்து தப்பித்து விமானத்தில் உள்ள பணிப்பெண்ணிடம் புகார் அளித்துள்ளார்.
பிறகு, மான்செஸ்டர் விமான நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விமானம் தரையிறங்கியதும் ஹர்மன் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, தவறை ஒப்புக்கொண்ட ஹர்மன் சிங்குக்கு மான்செஸ்டர் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை அளித்தது. இதன் பிறகு ஹர்மன் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!