Viral

Food Challenge.. 150 Momos சாப்பிட்ட இளைஞர்: நண்பர்கள் சவாலால் நடந்த அதிர்ச்சி!

பீகார் மாநிலம் சிஹோர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் விபின். இவரை அவரது நண்பர்கள் மோமோஸ் சாப்பிட உணவு விடுதி ஒன்றுக்கு அழைத்துள்ளனர். இவரும் நண்பர்கள் அழைப்பை ஏற்று அங்குச் சென்றுள்ளார்.

அப்போது நண்பர்களுக்குள் ஒரு போட்டி வைத்துள்ளனர். அதாவது அதிகமாக யார் மோமோஸ் சாப்பிடுகிறோர்களோ அவர்களுக்கு ரூ.1000 என பந்தயம் வைத்துள்ளனர். இதையடுத்து நண்பர்கள் அனைவரும் மோமோஸை சாப்பிட்டுள்ளனர்.

இதில் விபின் அதிகமாக 150 மோமோஸ்களை சாப்பிட்டு முடித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து நண்பர்கள் மற்றும் உணவு விடுதிக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பிறகு அவரை தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு விபினை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு நண்பர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 150 மோமோஸ்களை சாப்பிட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெற்றோர்.. குழந்தைகள் கண் முன்னே நடந்த துயர சம்பவம்: அதிர்ச்சி வீடியோ!