Viral
”எங்க அப்பாவை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்”.. காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்த 9 வயது சிறுவன்!
ஆந்திரா மாநிலம் இஸ்லாம்பேட்டை காவல்நிலையத்தில் 9 வயது சிறுவர் ரஹீம் புகார் ஒன்று கொடுக்க வந்ததாகக் கூறியுள்ளார். அப்போது காவல்துறை ஆய்வாளர் சிவய்யா சிறுவனை அழைத்து காவல்நிலையத்திற்கு வந்த காரணம் குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது சிறுவன், தனது தந்தை தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து அம்மாவை அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் அவர் மீது போலிஸில் புகார் கொடுக்க வந்தேன். இவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் சிறுவனின் பெற்றோர் சுபானி மற்றும் சுப்பம்பியை அழைத்துக் கண்டித்துள்ளனர். மீண்டும் இதேபோன்று நடந்து கொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் சுபானியை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.
பெரியவர்களே காவல் நிலையத்திற்கு வருவதற்கு அச்சப்படும் நிலையில் 9 வயது சிறுவன் துணிச்சலுடன் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்ததைப் பார்த்து போலிஸார் பாராட்டியுள்ளனர். தற்போது சிறுவன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த பலரும் அம்மாவின்மீதான காதல் இது என சிறுவனைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!
-
புதுப்பொலிவு பெற்ற தமிழ்நாடு ஆவணக்காப்பகம்: Japanese Tissue முறையை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி
-
சென்னையில் 4035 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் : 2 அமைச்சர்கள் ஆய்வு!
-
“பொள்ளாச்சி சம்பவத்தைப் போல் நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை” : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
தமிழ்நாட்டில் மதமாற்றம் என்று பொய்யை பரப்பிய அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்க : வைகோ வலியுறுத்தல்!