Viral
பட்டத்தோடு சேர்த்து பறந்த குழந்தை: பட்டம் விடும்போது நேர்ந்த விபரீதம் - வீடியோ உண்மையா ?
இணைய ஊடகம் அதிகரித்து விட்டதால் அடிக்கடி சில வீடியோக்கள் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் சொல்லப்படும் செய்திகள் உண்மைதானா என்பதைப் பற்றி நாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதை அப்படியே நம்பி விடுவது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பட்டம் விடும் விழாவின்போது 3 வயதுக் குழந்தை ஒன்று பட்டத்தோடு பறந்து சென்றதாக வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அது உண்மை என நம்பி தாங்களும் தங்களது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் செய்தி ஊடகங்கள் கூட இந்த வீடியோவை செய்தியாக வெளியிட்டுள்ளது.
ஆனால், இப்படி ஒரு சம்பவம் குஜராத்தில் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. 2020ம் ஆண்டு தைவான் நாட்டில் நடந்த பட்டம் விடும் விழாவின்போதுதான் குழந்தை ஒன்று பட்டத்தோடு சேர்ந்து பரந்தது.
இந்த வீடியோதான் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது குஜராத்தில் நடந்ததுபோல் பரவி வருகிறது. மேலும் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வீடியோ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் நடந்த பட்டம் விடும் விழாவில் பட்டத்தோடு குழந்தை பரக்கவில்லை என்று இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?