Viral
பட்டத்தோடு சேர்த்து பறந்த குழந்தை: பட்டம் விடும்போது நேர்ந்த விபரீதம் - வீடியோ உண்மையா ?
இணைய ஊடகம் அதிகரித்து விட்டதால் அடிக்கடி சில வீடியோக்கள் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் சொல்லப்படும் செய்திகள் உண்மைதானா என்பதைப் பற்றி நாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதை அப்படியே நம்பி விடுவது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பட்டம் விடும் விழாவின்போது 3 வயதுக் குழந்தை ஒன்று பட்டத்தோடு பறந்து சென்றதாக வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அது உண்மை என நம்பி தாங்களும் தங்களது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் செய்தி ஊடகங்கள் கூட இந்த வீடியோவை செய்தியாக வெளியிட்டுள்ளது.
ஆனால், இப்படி ஒரு சம்பவம் குஜராத்தில் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. 2020ம் ஆண்டு தைவான் நாட்டில் நடந்த பட்டம் விடும் விழாவின்போதுதான் குழந்தை ஒன்று பட்டத்தோடு சேர்ந்து பரந்தது.
இந்த வீடியோதான் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது குஜராத்தில் நடந்ததுபோல் பரவி வருகிறது. மேலும் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வீடியோ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் நடந்த பட்டம் விடும் விழாவில் பட்டத்தோடு குழந்தை பரக்கவில்லை என்று இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !