Viral
ம.பி: அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு.. தடுமாறிய பேருந்தில் சிக்கி முதியவர் பலி|VIDEO
மத்திய பிரதேசத்தின் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததால், நிலை தடுமாறிய பேருந்து விபத்தானத்தில், முதியவர் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆயிரக்கணக்கான அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜபல்பூர் என்ற பகுதியில் மெட்ரோ பேருந்தை ஒன்றை ஹர்தேவ் பால் (60) என்பவர் ஓட்டி கொண்டிருந்தார்.
அப்போது ஜபல்பூரிலுள்ள போக்குவரத்து சிக்னல் அருகே பேருந்தை ஓட்டி வந்துகொண்டிருக்கும் போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது நிலைகுலைந்து போன அவர், ஸ்டீயரிங் மீதே மயங்கி விழுந்தார். மேலும் இதனால் நிலை தடுமாறிய பேருந்து சாலையில் இருந்த வாகனங்கள் மீது சரமாரியாக மோதியது.
இந்த விபத்தில் அங்கிருந்த பயணிகள், இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி படுகாயமடைந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் அடையாளம் பற்றிய விவரம் ஏதும் அறியப்படவில்லை.
இந்த நிலையில் இந்த கோர விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. அதோடு இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !