Viral
டிஜிட்டல் ATM வசதியை அறிமுகப்படுத்திய PhonePe : இனிமேல் இப்படியும் பணம் எடுக்க முடியும் !
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் டிஜிட்டல் வாலட்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது PhonePe.
முதன் முதலில் இந்தியாவில் டிஜிட்டல் ஏ.டி.எம் சேவையை PhonePe நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டெல்லி என்.சி.ஆரில் சோதனை ஓட்டம் முறையில் செயல்படுத்தப்படும் இந்த டிஜிட்டல் ஏ.டி.எம் சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு, தங்களது வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை என்றால் PhonePeபரிவர்த்தனையை பயன்படுத்துவோர் டிஜிட்டல் ஏ.டி.எம் சேவையை பெறலாம்.
எப்படியெனில், ATM சென்று பணம் பெற முடியாதவர்கள், PhonePe செயலி மூலம் அருகே உள்ள வணிகரிடம் சென்று, PhonePe மூலம் அந்த வணிகருக்கு பணம் செலுத்திவிட்டால் போதும். அவர் கையில் பணமாக கொடுத்துவிடுவார். இதற்கென எந்த சேவை கட்டணமும் கிடையாது.
மேலும், அதிகபட்ச அளவு என இந்த டிஜிட்டல் ஏ.டி.எம் சேவைக்கு நிர்ணயம் செய்யவில்லை. ஆனால், சோதனை ஓட்டம் என்பதால், தற்போது டெல்லி என்.சி.ஆரில் ரூ.1000 வரை இந்த சேவையின் மூலம் பயன்பெறலாம் என PhonePe நிறுவனம் தெரிவித்துள்ளது.
PhonePe இந்த அறிவிப்பு மூலம், இதர ஆன்லைன் வாலட்களான கூகுள் பே, அமேசான் பே, பேடிஎம் கூடிய விரைவில் இது போன்றதொரு அறிவிப்பை வெளியிடும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்க காரணம் இதுதான்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு - முழு விவரம்!
-
சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சத்தில் சிலை... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
புறநகர் ரயில் ரத்து - தென்னக ரயில்வேயின் அலட்சியம்.. கேட்காமலேயே அரசு பேருந்து சேவை: அமைச்சர் சிவசங்கர்!
-
புரசைவாக்கம் முதல் மூலகொத்தளம் வரை.. இடைவிடாது அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்.. துணை முதலமைச்சர் அசத்தல்!
-
மொத்தம் ரூ.16 கோடியில்.. உள்விளையாட்டரங்கம் முதல் திருமண மண்டபம் வரை.. திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!