Viral
“ரவிவர்மாவின் ஓவியங்களாக மாறிய நடிகைகள்” : சமந்தா, ஸ்ருதிஹாசன், குஷ்பூ என வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகையும், இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம், நாம் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். சமுதாயத்தில் உழைக்கும் ஒற்றைப் பெண்களின் மேம்பாட்டிற்காக இந்த அறக்கட்டளை செயலாற்றி வருகிறது.
இந்த அறக்கட்டளையின் 10ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடும் வகையில் பெண்களை சிறப்பிக்கும் காலண்டர் ஒன்று உருவாகி வருகிறது. இதனடிப்படையில் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியங்களுக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் ரவிவர்மா வரைந்த அக்கால பெண்களைப் போன்று நடிகைகளைக் கொண்டு மேற்படி காலண்டர் தயாரிக்கப்படுகிறது.
இதற்காக நடிகைகள் குஷ்பூ, சமந்தா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஷோபனா உள்ளிட்ட 12 நடிகைகள் ரவிவர்மாவின் ஓவியங்களுக்கு மாடலாக போஸ் கொடுத்து, அந்த ஓவியங்களுக்கு உயிரூட்டியுள்ளனர்.
நடிகைகளின் மாடல் புகைப்படங்களை பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read
-
பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் போலி Instagram கணக்கு : பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி - நடந்தது என்ன?
-
தமிழ்நாட்டில் 4 உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்!
-
”இந்திய நீதித்துறையை அச்சுறுத்துவதற்காக வீசப்பட்ட காலணி” : கி.வீரமணி கடும் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாட்டு மையமாக மாற்ற வேண்டும்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : இரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு!