Viral
“ரவிவர்மாவின் ஓவியங்களாக மாறிய நடிகைகள்” : சமந்தா, ஸ்ருதிஹாசன், குஷ்பூ என வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகையும், இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம், நாம் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். சமுதாயத்தில் உழைக்கும் ஒற்றைப் பெண்களின் மேம்பாட்டிற்காக இந்த அறக்கட்டளை செயலாற்றி வருகிறது.
இந்த அறக்கட்டளையின் 10ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடும் வகையில் பெண்களை சிறப்பிக்கும் காலண்டர் ஒன்று உருவாகி வருகிறது. இதனடிப்படையில் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியங்களுக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் ரவிவர்மா வரைந்த அக்கால பெண்களைப் போன்று நடிகைகளைக் கொண்டு மேற்படி காலண்டர் தயாரிக்கப்படுகிறது.
இதற்காக நடிகைகள் குஷ்பூ, சமந்தா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஷோபனா உள்ளிட்ட 12 நடிகைகள் ரவிவர்மாவின் ஓவியங்களுக்கு மாடலாக போஸ் கொடுத்து, அந்த ஓவியங்களுக்கு உயிரூட்டியுள்ளனர்.
நடிகைகளின் மாடல் புகைப்படங்களை பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!