Viral
“ரவிவர்மாவின் ஓவியங்களாக மாறிய நடிகைகள்” : சமந்தா, ஸ்ருதிஹாசன், குஷ்பூ என வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகையும், இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம், நாம் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். சமுதாயத்தில் உழைக்கும் ஒற்றைப் பெண்களின் மேம்பாட்டிற்காக இந்த அறக்கட்டளை செயலாற்றி வருகிறது.
இந்த அறக்கட்டளையின் 10ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடும் வகையில் பெண்களை சிறப்பிக்கும் காலண்டர் ஒன்று உருவாகி வருகிறது. இதனடிப்படையில் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியங்களுக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் ரவிவர்மா வரைந்த அக்கால பெண்களைப் போன்று நடிகைகளைக் கொண்டு மேற்படி காலண்டர் தயாரிக்கப்படுகிறது.
இதற்காக நடிகைகள் குஷ்பூ, சமந்தா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஷோபனா உள்ளிட்ட 12 நடிகைகள் ரவிவர்மாவின் ஓவியங்களுக்கு மாடலாக போஸ் கொடுத்து, அந்த ஓவியங்களுக்கு உயிரூட்டியுள்ளனர்.
நடிகைகளின் மாடல் புகைப்படங்களை பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read
-
”இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்து பொய் பேசும் மோடி” : ப.சிதம்பரம் கண்டனம்!
-
”மோடியின் பொருளாதாரக் கொள்கை அடிமைத்தனத்திற்கான பாதை” : பரகல பிரபாகர் கடும் தாக்கு!
-
பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மீது நடந்த கொடுமைகளை மறக்க முடியுமா? : அமித்ஷா கருத்துக்கு சித்தராமையா பதிலடி!
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!