Viral
பருவ வயது பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத் தர வேண்டிய மான் முத்திரை - நலம் நலம் அறிக ! (வீடியோ)
குழந்தைகள் பருவ வயதை அடையும் போது பொதுவாக எல்லா பெற்றோர்களும் “என் பிள்ளைங்க நான் சொல்றத கேட்கவே மாட்டேங்குறாங்க, சிடு சிடுனு இருக்காங்க, எரிச்சலா இருக்காங்க” என புலம்புவது வழக்கம்.
அதேபோல, பருவ வயதில் உள்ள பெண்களும், ஆண்களும் அதீத சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். விவேகமே இல்லாமல் வேகமாக எல்லா காரியங்களிலும் ஈடுபடுவார்கள்.
இது போன்ற செயல்பாடுகளில் இருந்து குழந்தைகளை தடுப்பதற்கு எளிய முறையாக சித்த மருத்துவத்தில் மான் முத்திரையின் மூலம் கையாளப் படுகிறது.
இந்த மான் முத்திரையை பெற்றோர், குழந்தைகள் என அனைத்து வயதினரும் செய்யக்கூடிய ஒன்றுதான் என கூறுகிறார் வர்ம மற்றும் சித்த மருத்துவர் கல்பனா தேவி.
தினந்தோறும், காலை இரவு என தலா 20 நிமிடங்கள் இந்த மான் முத்திரையை செய்து வந்தால் மன அழுத்தத்தால் ஏற்படும் மலச்சிக்கல் சீராகும்.
வலிப்பு நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் இந்த மான் முத்திரையையும் உடன் செய்து வந்தால் நன்மை பயக்கும். பற்களில் ஈறுகளில் ஏற்படும் கோளாறுகள் சீராகும்.
பிரச்னையே இல்லாவற்றுக்கெல்லாம் கோபமடைபவர்கள், மன சோர்வு கொள்பவர்கள் இந்த மான் முத்திரையை தினந்தோறும் 10 முதல் 40 நிமிடங்களுக்கு செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என மருத்துவர் கூறுகிறார்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!