Viral
இந்தியாவில் பிளாஸ்டிக் இல்லாத கிராமம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - ‘லாச்சுங்’ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரிய அளவில் குறைக்கவேண்டும் என எண்ணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. ஆனாலும் நாடுமுழுவதும் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியாமல் அரசும் தன்னார்வலர்களும் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய நாட்டில் ஒருமாநிலத்தில் உள்ள கிராமத்தில் பிளாஸ்டிக் பயன்பாடே இல்லை என்றால் நம்ப முடிகிறதா? அப்படி ஒருகிராம் உள்ளது. அந்த கிராமத்தில் சுற்றுலா வருவோரின் வாகனத்தை எல்லையில் வழி மறைத்து கிராம மக்களே சோதனை செய்வார்களாம்.
அப்படி சோதனையின் போது பிளாஸ்டிக் பாட்டில் போன்ற பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தால் அனுமதி மறுத்துவிடுவார்களாம். ஒருவேலை இல்லை என்றால் சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டு வாழ்த்தி அனுப்பி வைப்பார்கள் என்றுக் கூறப்படுகிறது.
கேட்கவே விநோதமாக இருக்கிறதல்லவா? சிக்கிம் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மலை கிராமமான லாச்சுங் தான் அது.
லாச்சுங் கிராம மக்கள் அனைவருமே முழுமையான பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. லாச்சுங் கிராமம் சிக்கிம் மாநிலத்தின் சிறந்த சுற்றுலா இடம் எனக் கூறப்படுகிறது. லாச்சுங் கிராமத்தில் பசும்புல்வெளிகள், அழகிய குன்றுகள், கண்ணுக்குக் குளிர்ச்சியான இடங்கள் போன்றவை இருப்பதாலே அதிகமாக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி, இந்த ஊருக்கான தனிச்சிறப்பே பிளாஸ்டிக் தடை என்பது தான். குறிப்பாக விலைக்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களை ஊருக்குள் எடுத்துச் செல்ல முடியாது. அதையும் மீறி எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம். அதுதவிர, எந்த வகையான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் அனுமதியில்லை. அதனால்தான், இன்று இந்தியாவில் பிளாஸ்டிக் பாட்டில் இல்லாத ஒரே கிராமமாக மிளிர்கிறது லாச்சுங்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!