Viral
மாரிதாஸின் பொய்கள் : வலதுசாரி புரட்டுகளை வெச்சு செய்யும் யூ-ட்யூப் சேனல்!
ஒரு தேர்ந்த அரசியல் ஞானி போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, பொய்களை அவிழ்த்துவிட்டு வரும் மாரிதாஸ் என்பவர், தி.மு.க பற்றியும், திராவிடக் கட்சிகளின் ஆட்சி பற்றியும், முற்றிலும் தவறான கருத்துகளை வீடியோக்களின் மூலம் கூறி வருகிறார்.
பெரிய டிஜிட்டல் திரை ஒன்றில் பவர் பாயிண்ட் காட்சிகளை ஓடவிட்டு அதை விளக்குவதாகக் கூறி முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருகிறார் மாரிதாஸ். அவரைப் பின்தொடரும் ஆயிரக்கணக்கானோரும் அவர் சொல்வதை உண்மை என நம்புவதுதான் இப்போது மிகப்பெரிய சிக்கல்.
காஷ்மீர் விவகாரத்தில், காஷ்மீரிகளின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாக சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பா.ஜ.க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் தி.மு.க பா.ஜ.க அரசின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தது.
இதையொட்டி, மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ பதிவில், தி.மு.க-வுக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக, தன் மனதுக்குத் தோன்றியதையெல்லாம் உளறிக்கொட்டியிருந்தார் மாரிதாஸ்.
இதையடுத்து, திட்டமிட்டு அவதூறு பரப்பி, மக்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதோடு, பகைமையை ஊக்குவிக்கும் விதமாகவும், மதங்களுக்கிடையேயான வன்முறைகளைத் தூண்டும் விதமாகவும் பேசி வருவதாக மாரிதாஸ் மீது தி.மு.க சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாரிதாஸ் அள்ளித்தூவும் பொய் புரட்டுகளை அம்பலப்படுத்தும் விதமாக ‘செய்கை தொடரும்’ எனும் யூ-ட்யூப் சேனல் செயல்பட்டு வருகிறது. மாரிதாஸ் தொடர்ந்து வெளியிட்டு வரும் புரட்டுகளை ஆதாரப்பூர்வமாக மிக எளிமையான முறையில் விளக்குகிறது இந்த யூ-ட்யூப் சேனலின் காணொளிகள்.
புதிய கல்விக்கொள்கையின் திட்டங்களைத் திணிப்பதற்காக தமிழகத்தில் செயல்பட்டு வரும் சமச்சீர் கல்வியை குறைகூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் மாரிதாஸ். அதிலும் ஏகப்பட்ட புரட்டுகள். அதுகுறித்த உண்மைகளையும் விளக்கியிருக்கிறது ‘செய்கை தொடரும்’ யூ-ட்யூப் சேனல்.
திராவிட ஆட்சியைக் குறை கூறி, பா.ஜ.க-வின் இந்துத்வ சிந்தனைகளை ஊக்குவிப்பதன் மூலம், மதங்களுக்கிடையேயான பிரிவினையை ஊக்குவிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ள மாரிதாஸுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!