Viral
இந்த குழந்தைக்கா இப்படி நடக்க வேண்டும்?! - டிக் டாக் புகழ் கேரள சிறுமிக்கு நடந்த சோகம்!
உலகம் முழுவதும் டிக் டாக் செயலியை பயன்படுத்துபவர்களும், அதில் வரும் காணொளிகளை கண்டு ரசிப்பவர்களும் சரிநிகர் அளவில் உள்ளனர். அதிலும், டிக் டாக்கில் குழந்தைகளின் அழகு கொஞ்சும் பாவனைகளுடன் வரும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.
அந்த வகையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆருணி என்ற 9 வயது சிறுமிியின் டிக் டாக் வீடியோக்களை 15 ஆயிரத்துக்கும் மேலான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.
கொஞ்சும் மலையாள மொழியில் தனக்கே உரிய மழலை பாணியிலும், வீடியோக்களுக்கு ஏற்றது போன்ற தொணியிலும் பலவகையில் அட்டகாசமாக நடித்து டிக்டாக்கில் பதிவிட்டு வந்திருந்தார் சிறுமி ஆருணி.
இந்த நிலையில், கடுமையான தலைவலி காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி ஆருணி அனுமதிக்கப்பட்டார். சிறுமியை சோதித்து பார்த்த பிறகு தலைவலிக்கான காரணம் தெரியவந்துள்ளது.
சிறுமி ஆருணியை தாக்கியது பன்றிக்காய்ச்சல் என்று தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவரது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததை அடுத்து கடந்த ஜூலை 25ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
ஆருணியின் மறைவு செய்தி அறிந்த அவரது டிக்டாக் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், டிக் டாக்கில் உள்ள ஆருணியின் பயோவில் “உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி... நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்” என அவரது பெற்றோர் பதிவிட்டுள்ளது, நெஞ்சை உலுக்குகிறது.
Also Read
-
மீண்டும் தி.மு.க ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : உறுதிபடுத்திய ABP நாடு கருத்துக்கணிப்பு!
-
“தொகுதி மறுவரையறை பா.ஜ.க-வின் அரசின் அரசியல் சதித் திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
-
🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!
-
குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!
-
“தரம்கெட்டுப் பேசும் பழனிசாமிக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!