Viral
திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன?
நாடுமுழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியாத சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பலர் தோல்விக்குப் பொறுப்பேற்று தங்களது பதிவில் இருந்து விலகினர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவரான திவ்யா ஸ்பந்தனாவின் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சமூக ஊடகங்களில் பெரிய அளவில் கொண்டு சேர்த்தவர் திவ்யா. கட்சியில் உள்ள சில தலைவர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டாலும் சமூக வலைதள பணியை சிறப்பாக செயலாற்றியவர். இவர் சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
இதனிடையே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி காரணமாக அக்கட்சியின் சமூக ஊடகப்பிரிவிலிருந்து, அவர் விலகிவிட்டடதாக வெளியான தகவலை திவ்யா மறுத்துள்ளார்.
முன்னதாக ஒரு மாதத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்ற அக்கட்சி தெரிவித்தது. இதன் விளைவாகத் தான் திவ்யா ட்விட்டர் கணக்கை நீக்கினார் என தகவல்களும் பரவி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!