Viral
இலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு!
இலங்கையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை நாளில் தேவாலயம், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் இது வரை 293 பேர் பலியாகியுள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்நிலையில் இன்று கொழும்பு பகுதியில் மேலும் ஒரு குண்டு வெடித்துள்ளது. கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள தேவாலயம் அருகே காரில் இருந்த வெடி குண்டை, போலீஸார் கண்டுபிடித்து செயலிழக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது. இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இலங்கையில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 0பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
”கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கை.. இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு”! - முழு விவரம்!
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!