Viral
இலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு!
இலங்கையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை நாளில் தேவாலயம், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் இது வரை 293 பேர் பலியாகியுள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்நிலையில் இன்று கொழும்பு பகுதியில் மேலும் ஒரு குண்டு வெடித்துள்ளது. கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள தேவாலயம் அருகே காரில் இருந்த வெடி குண்டை, போலீஸார் கண்டுபிடித்து செயலிழக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது. இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இலங்கையில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 0பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!