Viral
பேட்டா நிறுவனத்திற்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம் !
சண்டிகரைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ஒருவர் பேட்டா ஷூ கடையில் ஷு வாங்கிய பின்னர் கேரி பேக்-காக 3 ரூபாய் அதிகம் தர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். 402 ரூபாய் பில் பணத்துடன் கூடுதலாக கேரி பேக்-காக 3 ரூபாய் வசூலிக்கப்பட்ட விவகாரத்தை நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த வாடிக்கையாளர் முறையிட்டார்.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பில், “உங்கள் கடையில் பொருள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நீங்கள்தான் கேரி பேக் தர வேண்டும். சுற்றுச்சூழல் நலன் கருதினால் உங்கள் நிறுவனம் அதற்குத் தகுந்த மாற்று ஏற்பாடுகளை வாடிக்கையாளர்களுக்குச் செய்து கொடுக்க வேண்டும்” என பேட்டா நிறுவனத்திடம் உத்தரவு பிறப்பித்தது.
கூடுதலாக, வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட செலவுகளைத் திருப்பி அளிக்குமாறும் பேட்டா ஷூ நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், கேரி பேக் செலவு 3 ரூபாய், வழக்குத் தொடுத்த செலவு 1,000 ரூபாய், நஷ்ட ஈடாக 3 ஆயிரம் ரூபாய், அபராதமாக 5 ஆயிரம் ரூபாய் என 9 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!