Viral
பேட்டா நிறுவனத்திற்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம் !
சண்டிகரைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ஒருவர் பேட்டா ஷூ கடையில் ஷு வாங்கிய பின்னர் கேரி பேக்-காக 3 ரூபாய் அதிகம் தர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். 402 ரூபாய் பில் பணத்துடன் கூடுதலாக கேரி பேக்-காக 3 ரூபாய் வசூலிக்கப்பட்ட விவகாரத்தை நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த வாடிக்கையாளர் முறையிட்டார்.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பில், “உங்கள் கடையில் பொருள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நீங்கள்தான் கேரி பேக் தர வேண்டும். சுற்றுச்சூழல் நலன் கருதினால் உங்கள் நிறுவனம் அதற்குத் தகுந்த மாற்று ஏற்பாடுகளை வாடிக்கையாளர்களுக்குச் செய்து கொடுக்க வேண்டும்” என பேட்டா நிறுவனத்திடம் உத்தரவு பிறப்பித்தது.
கூடுதலாக, வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட செலவுகளைத் திருப்பி அளிக்குமாறும் பேட்டா ஷூ நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், கேரி பேக் செலவு 3 ரூபாய், வழக்குத் தொடுத்த செலவு 1,000 ரூபாய், நஷ்ட ஈடாக 3 ஆயிரம் ரூபாய், அபராதமாக 5 ஆயிரம் ரூபாய் என 9 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டது.
Also Read
-
”நெல் கொள்முதலில் தமிழ்நாடு அரசு சாதணை” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் சக்கரபாணி!
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெறிவோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!