Tamilnadu
திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் : த.வெ.க ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி கரும்பியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் . இவர் த.வெ.க திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு, ஆனந்தும் அவரது நண்பரான அசோக் என்பவரும் திருவாரூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் இருந்துள்ளனர்.அப்போது, 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது தந்தை வருவதற்காகப் பேருந்து நிலையத்தில் தனியாகக் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ஆனந்த் மற்றும் அசோக் ஆகிய இருவரும், அந்தப் பெண்ணிடம் அத்துமீறி இரட்டை அர்த்தத்தில் கிண்டல் செய்து ஈவ்டீசிங் செய்துள்ளனர்.
அந்தச் சமயத்தில் பெண்ணின் தந்தை அங்கு வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரத்தைக் கூறவே, ஆத்திரமடைந்த தந்தை அவர்களைத் தட்டிக்கேட்டுள்ளார்.
மேலும், அவர்கள் தப்பியோட முயன்றபோது துணிச்சலாகச் செயல்பட்டு அவர்களின் இருசக்கர வாகனத்தின் சாவியைப் பிடுங்கிக் கொண்டார். பின்னர் தனது மகளை அழைத்துக் கொண்டு திருவாரூர் நகர காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.
பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், தவெக ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகிய இருவர் மீதும் பெண்களைக் கிண்டல் செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தலைமறைவாக முயன்ற இருவரையும் அதிரடியாகக் கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில்/பொது இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க ஆட்சியில் பெண்கள் மீது தொடர்ந்து த.வெ.க நிர்வாகிகளே அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!