Tamilnadu
திருச்சி ரயில் நிலையத்தில் Laptop திருடிய த.வெ.க நிர்வாகி : கைது செய்த காவல்துறை!
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், கன்னியாகுமரியைச் சேர்ந்த மிஃப்டின் என்பவரது லேப்டாப் திருடுபோயுள்ளது. இது குறித்து அவர் திருச்சி இரயில்வே போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த பரணிதரன், கே. கள்ளிக்குடியைச் சேர்ந்த ரோகன் தேவ் ஆகியோர் லேப்டாப்பைத் திருடியது தெரியவந்தது.
அவர்களைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் லேப்டாப் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து லேப்டாப்பைப் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.லேப்டாப்பைத் திருடிக் கைது செய்யப்பட்ட பரணிதரன், தமிழக வெற்றிக் கழகத்தில் மணிகண்டம் ஒன்றியச் செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதாகப் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய்யின் கட்சியைச் சேர்ந்தவர்களே, பல்வேறு திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், திருச்சியிலும் லேப்டாப் திருட்டில் த.வெ.க-வைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!
-
“மேகதாது விவகாரம்.. விஷப் பரீட்சை வேண்டாம்” : தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“நான் விஜய் Fan..” : மாணவர்கள் போராட்டத்தில் பேச்சு.. மூக்குடைபட்டு திரும்பிய சனம் செட்டி - என்ன நடந்தது?
-
தி.மு.க எப்போதும் உங்கள் பக்கமே நிற்கும் : சென்னையில் நடைபெறும் நீட் போராட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!
-
தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? : கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!