Tamilnadu
கோடை வெப்பத்தைத் தணிக்கச் சட்டைப் பையில் வெங்காயம் : ஒன்றிய அமைச்சரின் மூடநம்பிக்கை!
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வெப்பத்தைத் தணிக்க இளநீர், நுங்கு, பழச்சாறுகள் ஆகியவற்றை மக்கள் நாடி வருகின்றனர். வரும் நாட்களில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க உங்கள் சட்டைப் பையில் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார்.
மேலும், தான் காரில் செல்லும்போதும் அல்லது தங்கியிருக்கும் இடங்களிலும் குளிர்சாதன வசதியை பயன்படுத்துவதில்லை என்றும், இந்த வெங்காய முறையே தனது ஆரோக்கியத்தின் ரகசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லாத அமைச்சரின் இந்தப் பேச்சுக்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
Also Read
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”