Tamilnadu
தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை.. 84% தாண்டிய வாக்குப்பதிவு!
தமிழ்நாட்டில் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 5.63 கோடி வாக்களர்கள், 75,064 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு . இன்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தலாம்.
தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப்.23) 17-வது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக ஆகிய 4 கட்சிகள் நேரடியாக களம் காணும் நிலையில், இந்த தேர்தல் இந்திய அளவில் பெருமளவு கவனத்தை ஈர்த்துள்ளது.
மாநிலம் முழுவதும் 5.63 கோடி வாக்களர்கள், 75,064 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள், பெண்கள் என பலரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியோடு நிறைவடைந்தது. அதன் படி மாலை 5 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 82.24% வாக்குகள் பதிவாகிய நிலையில், மொத்தமாக 85% வாக்குகள் பதிவாகி புதிய வரலாறை படைத்துள்ளது தமிழ்நாடு தேர்தல். இதில் அதிகமாக கரூர் மாவட்டம் 91.86% வாக்குகள் பெற்றுள்ளது. மேலும் மாவட்டம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.
Also Read
-
”திராவிட மாடல் 2.O ஆட்சியை மக்கள் உருவாக்கும் நாள்.. தமிழ்நாட்டைக் காக்க வாக்களியுங்கள்” : முரசொலி!
-
🔴|2026 சட்டமன்றத் தேர்தல்: உடனுக்குடன் வாக்குப்பதிவு நிலவரம்!
-
”பரபரக்கும் களம்.. தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை”!
-
”வெற்றி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே! விழிப்புணர்வு அவசியம்”: கழகத்தினருக்கு முதலமைச்சர் மடல்!
-
அண்ணா மேம்பாலம் தொடங்கி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வரை.. சென்னையை வளப்படுத்திய திமுக!