Tamilnadu
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல்? : சபாநாயகர் அப்பாவு சொன்ன தகவல்!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2026 பிப்.17 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை பிப்.17 ஆம் தேதி கூடுகிறது. அன்றே 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை அவையில் வாசிப்பார். பிப்.20 ஆம் தேதி 2025-26-க்கான கூடுதல் செலவுக்கான மாணிய கோரிக்கை அளிக்கப்படும்.
மேலும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்களுக்கு நடக்கும்” என அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
2026-ல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இது தேர்தலுக்கு முந்தைய இடைக்கால நிதிநிலை அறிக்கையாக அமையும்.
Also Read
-
தொகுதி மறுவரையறை : இதுதான் தி.மு.க-வின் நிலைப்பாடு - பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
-
தவெக அரசின் தனித்தீர்மானத்தால் எதுவும் செய்யமுடியாது; தமிழ்த்தாயையுமா ஏமாற்ற வேண்டும்? : முரசொலி காட்டம்!
-
காவிரி விவகாரம் ; பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருபோதும்... : தவெக அரசுக்கு வலியுறுத்திய ஓ.பன்னீர்செல்வம்!
-
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!