Tamilnadu
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல்? : சபாநாயகர் அப்பாவு சொன்ன தகவல்!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2026 பிப்.17 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை பிப்.17 ஆம் தேதி கூடுகிறது. அன்றே 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை அவையில் வாசிப்பார். பிப்.20 ஆம் தேதி 2025-26-க்கான கூடுதல் செலவுக்கான மாணிய கோரிக்கை அளிக்கப்படும்.
மேலும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்களுக்கு நடக்கும்” என அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
2026-ல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இது தேர்தலுக்கு முந்தைய இடைக்கால நிதிநிலை அறிக்கையாக அமையும்.
Also Read
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!