Tamilnadu
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதியில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சி குடும்பத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,” திரு.வி.நகர் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு திடல் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளோம். இதேபோல் சலவை கூடத்தையும் நவீன மயமாக்கி, இதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. இதையும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்திற்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.
புளியந்தோப்பு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆடுதொட்டி செயல்பாட்டில் உள்ளது. இதைவட சென்னை வளர்ச்சி திட்டத்தில் 45 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. ஆடு இறைச்சிக்கு மட்டும் 40 கடைகள், கிட்டத்தட்ட ஒவ்வொரு கடையும் 1400 சதுர அடியில் உள்ளது. 18 கடைகள் மாடு இறைச்சிக்காக கட்டப்பட்டு வருகிறது.
கீழடி, பொருநை அருங்காட்சியகங்களுக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள். அப்போதுதான் தமிழர்களின் அடையாளங்கள் பற்றி அவருக்கு தெரியும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் இரும்பை பயன்படுத்தியதை ஆதாரங்களுடன் உலகிற்கு அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒட்டுமொத்த இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே வழிகாட்டி வருகிறார் எங்கள் இரும்பு மனிதர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!
-
“நான் முதல்வனின் அடுத்த version-ல் சர்வதேச அளவிலான சாதனைதான்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
UPSC முடிவுகள் வெளியானது! - ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்று அசத்தல்!
-
டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா…பும்ரா குறித்து சஞ்சு சாம்சன் சொன்ன அந்த வார்த்தை!
-
“‘பட்டா’ என்ற பல ஆண்டு கனவை நம்முடைய அரசு இன்றைக்கு நனவாக்கி இருக்கிறது!” - துணை முதலமைச்சர் உதயநிதி உரை!