Tamilnadu
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு மகளிரின் வாக்குகளை பெறுவதற்காக ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க., கூட்டணி அரசு சார்பில் அவர்களது வங்கிக்கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. சுமார் ஒரு கோடியே 40 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், இந்த திட்டத்தில் மெகா முறைகேடு நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
பெண்களின் வங்கிக்கணக்கில் மட்டுமின்றி ஆண்களுக்கும் முறைகேடாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஆண்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப கேட்டு பீகார் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தர்பங்கா மாவட்டம் ஜாலே கிராமத்தில் மட்டும் 14 ஆண்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தை திருப்பி தர முடியாது என ஆண் பயனாளிகள் மறுப்பு தெரிவித்துள்ளார். எங்கள் வாக்குகளை திருப்பி தந்தால்தான் பணத்தை திருப்பி தருவோம் என பீகார் மக்கள் தெரிவித்துள்ளனர். எங்கள் வாக்கால்தான் பாஜக வெற்றி பெற்றது, வாக்களித்த உடன் கணக்கு தீர்ந்துவிட்டது என்று பீகார் மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்
Also Read
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!