Tamilnadu
”நெல் கொள்முதலில் தமிழ்நாடு அரசு சாதணை” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் சக்கரபாணி!
திண்டுக்கல்லில் 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி "தமிழ்நாட்டில் 38,000 நியாய விலை கடைகள் உள்ளது. இதில் 27,000 முழு நேர நியாயவிலைக் கடைகளுக்கு முனைய இயந்திரம் உள்ளது. பகுதிநேர நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யும் போது விற்பனை முனைய இயந்திரத்தை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது பணியாளர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ள காரணத்தினால் ரூ.53 கோடி மதிப்பீட்டில் 6,800 விற்பனை முனைய இயந்திரங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. பகுதி நேர கடைகளில் தற்போது இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் 376 அரிசி ஆலைகள் மட்டுமே இருந்தது. ஆனால் தி.மு.க ஆட்சியில் 700 அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படக்கூடிய அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் தரமாக உள்ளதாக என ஆய்வு செய்ய மாவட்ட வழங்கள் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 - 24 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலே இதுவரை இல்லாத அளவில் 4000 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டது.
10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் 1.79 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் திராவிட மாடல் ஆட்சி அமைந்து 54 மாதத்திலேயே 1.98 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனைப் படைத்துள்ளோம்.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூட்டுறவுத்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!
-
தொகுதி மறுவரையறை : தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!