Tamilnadu
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. நாட்டிலேயே இம்மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கிறது என புள்ளி விவரங்கள் கூறுகிறது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் 17 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோதுதான், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இது பற்றி பெற்றோர்கள் மகளிடம் கேட்டபோது கடந்த ஜூன் மாதம் ராஜ்பார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து இளைஞர் ராஜ்பார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மீண்டும் தி.மு.க ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : உறுதிபடுத்திய ABP நாடு கருத்துக்கணிப்பு!
-
“தொகுதி மறுவரையறை பா.ஜ.க-வின் அரசின் அரசியல் சதித் திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
-
🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!
-
குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!
-
“தரம்கெட்டுப் பேசும் பழனிசாமிக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!