Tamilnadu
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
திருச்சந்தூரில் இருந்து கடந்த அக்.10 ஆம் தேதி இரவு அந்தியூர் செல்லும் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த இருவர் ஈரோடு வரை வந்தனர். அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கும் போது, கையில் எடுத்து வந்த கைப்பையை பேருந்தில் தவறவிட்டு சென்றனர்.
பின்னர் பேருந்து பணிமனைக்கு சென்றது. அப்போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தின் இருக்கையில் பை இருப்பதை அறிந்து ஆய்வு செய்தபோது அதில் 28 பவுன் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
உடனே இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அதன் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு, 28 பவுன் தங்க நகையை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
தவறவிட்ட நகை தங்களுக்கு மீண்டும் கிடைத்ததில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தங்கம் விலை தினமும் உயர்ந்து வரும் நிலையில், நேர்மையுடன் நடந்து கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!