Tamilnadu
இனி பழைய பொருட்களை அகற்ற கவலை வேண்டாம் : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம்!
சென்னை மாநகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் பயன்படுத்த முடியாத அல்லது தேவையற்ற பழைய பொருட்களைச் சேகரித்து அகற்றுவதற்காக, சென்னை மாநகராட்சி ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் இந்தச் சேவையின் மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மரச்சாமான்கள் (சோபா, படுக்கைகள்), துணிகள் மற்றும் பழைய மின்னணுப் பொருட்கள் (e-waste) உள்ளிட்ட பெருமளவிலான குப்பைகளை அகற்ற முடியும்.
இந்தச் சேவை வாரந்தோறும் சனி கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர், பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
செயல்முறை 1 : 1913 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது 9445061913 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அல்லது கோரிக்கையைப் பதிவு செய்யலாம் அல்லது நம்ம சென்னை செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
செயல்முறை 2 : உங்கள் கோரிக்கை சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும்..
செயல்முறை 3 : குறிப்பிட்ட நாளில் உங்கள் வீட்டிற்கு வரும் மாநகராட்சி வாகனங்களில் உங்கள் பழைய சோபா, படுக்கைகள், துணிகள் மற்றும் மின்னணு கழிவுகளைச் சேகரித்துக் கொடுக்கலாம்.
செயல்முறை 4 : சென்னை மாநகராட்சியின் இந்தச் சேவை சனி கிழமைகளில் மட்டுமே கிடைக்கும்.
செயல்முறை 5 : சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாநகராட்சியால் பாதுகாப்பாக எரிக்கப்படும்.
தேவையற்ற மற்றும் பழைய பொருட்களைச் சரியான முறையில் அப்புறப்படுத்தி, சென்னையைத் தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
Also Read
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!
-
துன்பம் வரும்போது நம்மைக் காப்பவர் யார்? கைவிடுவோர் யார்? : மக்களுக்கு உணர்த்திய கரூர் துயரம்!
-
கரூர் துயர சம்பவம் : அவதூறு பரப்பிய Youtuber மாரிதாஸ்... கைது செய்த போலீஸ்!
-
“ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்!” : முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
“இந்தியாவில் 3 முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-க்கு நூற்றாண்டு நாணயமா?” : முரசொலி தலையங்கம் கண்டனம்!