Tamilnadu
”விஜய் பின்னால் இருப்பவர்கள் இவர்கள்தான்” : சபாநாயகர் அப்பாவு பேட்டி!
ஒன்றிய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கிறார்கள். பின்புலத்தில் மோடி, அமித்ஷா இருக்கும் தைரியத்தில் அரசியல் அடிச்சுவடே தெரியாமல் அகந்தையோடு விஜய் பேசுகிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு," ஒன்றிய அரசு கொடுக்கும் நிதியை பாரபட்சமின்றி கொடுக்க வேண்டும். மாற்றான் தாய் மனபான்மையோடு தமிழ்நாட்டை அணுகக்கூடாது.
ஆளுநர் எதையும் தெரிந்து கொள்ளாமல், அவருக்கு எழுதி கொடுப்பதை அப்படியே பேசுகிறார், அய்யோ பாவம் அவர். ஒன்றிய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
விஜய் சினிமாவில் வேசுவதை போல் அகந்தையோடு பேசுகிறார். பின்புலத்தில் மோடி, அமித்ஷா பாஜக இருக்கும் தைரியத்தில், அரசியல் அடிச்சுவடு தெரியாமல் விஜய் அகந்தையோடு பேசுகிறார். பாஜக தான் விஜயை இயக்குகிறது என்று, இவரது பேச்சில் இருந்தே தெரிகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தூத்துக்குடியில் ரூ.13,000 கோடியில் மிக உய்ய அனல் மின் நிலையம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
-
“இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!