Tamilnadu
”விஜய் பின்னால் இருப்பவர்கள் இவர்கள்தான்” : சபாநாயகர் அப்பாவு பேட்டி!
ஒன்றிய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கிறார்கள். பின்புலத்தில் மோடி, அமித்ஷா இருக்கும் தைரியத்தில் அரசியல் அடிச்சுவடே தெரியாமல் அகந்தையோடு விஜய் பேசுகிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு," ஒன்றிய அரசு கொடுக்கும் நிதியை பாரபட்சமின்றி கொடுக்க வேண்டும். மாற்றான் தாய் மனபான்மையோடு தமிழ்நாட்டை அணுகக்கூடாது.
ஆளுநர் எதையும் தெரிந்து கொள்ளாமல், அவருக்கு எழுதி கொடுப்பதை அப்படியே பேசுகிறார், அய்யோ பாவம் அவர். ஒன்றிய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
விஜய் சினிமாவில் வேசுவதை போல் அகந்தையோடு பேசுகிறார். பின்புலத்தில் மோடி, அமித்ஷா பாஜக இருக்கும் தைரியத்தில், அரசியல் அடிச்சுவடு தெரியாமல் விஜய் அகந்தையோடு பேசுகிறார். பாஜக தான் விஜயை இயக்குகிறது என்று, இவரது பேச்சில் இருந்தே தெரிகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!