Tamilnadu
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நகரப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் வகையில், இன்று சென்னை, மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுடன் உணவு அருந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதேபோல் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறி அவர்களுடன் காலை உணவு உட்கொண்டார்.
இந்த விழாவிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். நகரப்புறங்களில் உள்ள 2 ஆயிரத்து 429 பள்ளிகளில் இன்று முதல் முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்படுகிறது. இதனால் 3 இலட்சத்து 5 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற உள்ளார்கள்.
மேலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 5 ஆம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏன் வெளிநாடுகளிலும் இந்த திட்டத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.
Also Read
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!
-
விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. இறுதியில் திக் திக்.. வெற்றி பெற்றது யார்? - விவரம்!
-
CAMPA Energy : அஜித்திற்கு எதிராக திரும்பிய ரசிகர்கள்… இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு... இதுதான் காரணமா?
-
பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டிலான இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“ரூ.2 கோடியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பயிற்சி மையம்!” : முதலமைச்சரின் 2 அதிரடி அறிவிப்புகள்!