Tamilnadu
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!
மின்சாரம் மற்றும் மின்னணுக் கழிவுகள், பேட்டரி கழிவுகள் துறைகளில் பிரித்தெடுத்தல், மறுசுழற்சி செய்தல், துண்டாக்குதல் அல்லது புதுப்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஜிஎஸ்டியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் குறித்து திமுக மாநிலங்கலவை உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் முறையான மறுசுழற்சி முறையில் ஈட்டிய ஜிஎஸ்டி வரித் தொகை எவ்வளவு? மறுசுழற்சித் துறையில் முறைசாரா அல்லது பதிவு செய்யப்படாத ஆபரேட்டர்களால் ஏற்படும் வருவாய் இழப்பு எவ்வளவு? மின்-கழிவு மற்றும் பேட்டரி கழிவு மறுசுழற்சிக்கான முறைப்படுத்துதலை ஊக்குவிப்பதற்கும் வரி தவிர்ப்பைக் குறைப்பதற்கும் அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன? அதன்மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாய் எவ்வளவு எனவும் அவர் கேட்டுள்ளார்.
தோல்வியில் முடிந்ததா மேக் இன் இந்தியா திட்டம்?
தமிழ்நாட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் துறை வாரியாக தொடங்கப்பட்ட மொத்த திட்டங்களின் எண்ணிக்கை குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் செல்வம் மற்றும் சி. என். அண்ணாதுரை கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்தத் திட்டங்களின் செயல்பாடு குறித்து அரசு நடத்தியுள்ள ஆய்வுகள் என்ன? அதேபோல் மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் ஏற்பட்ட தாமதங்கள் அல்லது ரத்து செய்யப்பட்ட திட்டங்கள் எவை? தமிழ்நாட்டில் இந்த முயற்சியின் கீழ் ஒதுக்கப்பட்ட ஆனால் பயன்படுத்தப்படாமல் உள்ள தொழில்துறை வளாகங்கள் அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) யாவை? மேலும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அரசிடம் உள்ள செயல்திட்டங்கள் என்ன என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.
Also Read
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!
-
இனி பழைய பொருட்களை அகற்ற கவலை வேண்டாம் : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம்!
-
துன்பம் வரும்போது நம்மைக் காப்பவர் யார்? கைவிடுவோர் யார்? : மக்களுக்கு உணர்த்திய கரூர் துயரம்!
-
கரூர் துயர சம்பவம் : அவதூறு பரப்பிய Youtuber மாரிதாஸ்... கைது செய்த போலீஸ்!