Tamilnadu
”மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே” : பதிவுத் தபால் சேவையை நிறுத்தம் - சு.வெங்கடேசன் MP எதிர்ப்பு!
ஒன்றிய பா.ஜ.க அரசு ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை முடக்குவதிலேயே குறியாக இருந்து வருகிறது. தற்போது எளிய மக்கள் பயன்படுத்தி வரும் பதிவுத் தபால் சேவையை செப்டம்பர் மாதம் முதல் நிறுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பிற்கு, தபால் ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தம். விரைவுத் தபால் சேவையுடன் இணைப்பு என அஞ்சல்துறை அறிவிப்பு.
பதிவுத் தபால் சேவை குறைந்த பட்ச கட்டணம் ரூ. 26.
விரைவுத் தபால் எனில் ரூ. 41
பதிவுத் தபால் ஒப்புகை கட்டணம் ரூ. 3. விரைவுத் தபாலில் ரூ.10
பதிவுத் தபால் நபருக்கே போய்ச் சேரும். விரைவுத் தபால் முகவரிக்கு போய்ச் சேரும்.
பதிவுத் தபால் எடை கூடினால் மட்டுமே கட்டணம் கூடும். தேசம் முழுக்க எவ்வளவு தூரம் என்றாலும் ஒரே கட்டணம். விரைவுத் தபால் எடை கூடினாலும் கூடும். தூரம் கூடினாலும் கூடும்.
எல்லாம் எதற்கு? மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு.
"தக் சேவா; ஜன் சேவா" என்பது அஞ்சல் துறையின் முழக்கம். அதாவது அஞ்சல் சேவை மக்கள் சேவையாம்.
உண்மையில் "மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பேரா.வசந்தி தேவி திடீர் மறைவு கல்வித்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்” - முதலமைச்சர் இரங்கல்!
-
“வேர்களைத் தேடி” - 14 நாடுகளிலிருந்து 99 தமிழ் இளைஞர்களின் ‘தமிழ் பண்பாட்டுப் பயணம்’ தொடக்கம்!
-
சென்னை IIT - தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! : முழு விவரம் உள்ளே!
-
ரூ.18.12 கோடியில் சுற்றுலாத்துறைக்கு புதிய கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
திருவண்ணாமலை வளர்ச்சிக்கு... ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்