Tamilnadu
தூத்துக்குடி - மும்பைக்கு புதிய ரயில் எப்போது? : மக்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி MP!
திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று எழுத்துபூர்வமான கேள்விகளை ரயில்வே அமைச்சரிடம் எழுப்பினார்.
அதில், ”தூத்துக்குடிக்கும் மும்பைக்கும் இடையே மேம்படுத்தப்பட்ட ரயில்வே இணைப்புக்கான முக்கியத்துவம் வாய்ந்த தேவை இருப்பதை ஒன்றிய அரசு அறிந்திருக்கிறதா… இதன் அடிப்படையில் லோக்மான்ய திலக் எக்ஸ்பிரசை (ரயில் எண். 11043/11044) தூத்துக்குடிக்கு நீட்டிப்பதன் மூலமோ அல்லது புதிய நேரடி ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலமோ இத்தேவையை நிறைவேற்ற ஒன்றிய அரசு முனைந்திருக்கிறதா?
இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுவதற்கு கால நிர்ணயம் ஏதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?. தூத்துக்குடிக்கு ரயில் இணைப்பை மேம்படுத்த வேறு ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
இக்கேள்விகளுக்கு ஒன்றிய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில்,”மும்பை - தூத்துக்குடிக்கு இடையே 19567/19568 எண் கொண்ட தூத்துக்குடி - ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வே 19.07.2024 முதல் வாரத்திற்கு இரு முறை இயக்கப்படும் 16765/16766 மேட்டுப்பாளையம் -தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மேலும், திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் (16791/16792) சேவை 15.08.2024 முதல் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தவிர போக்குவரத்து தேவைகள், செயல்பாட்டு சாத்தியக் கூறுகள், திட்டத்துக்கு தேவையான வளங்கள் கிடைக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து , புதிய ரயில்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் ரயில் சேவைகளை நீட்டித்தல் ஆகியவை ரயில்வேயில் தொடர்ந்து நடைபெற்று வரும் செயல்முறைகளாகும்” என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!