Tamilnadu
தமிழ்நாட்டில் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 6 MP-க்கள் பதிவுக் காலம் முடிவு - யார் அவர்கள்?
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் தி.மு.கவை சேர்ந்த எம். சண்முகம், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், பா.ம.க அன்புமணி ராமதாஸ் ஆகிய 6 பேரின் பதிவுக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் இந்த 6 இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும் ஜூன் 12 ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு 159 உறுப்பினர்கள் உள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 75 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் திமுக கூட்டணிக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுக கூட்டணிக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாநிலங்களவை பதவிக்கு போட்டி நடைபெறும் பட்சத்தில் ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.
Also Read
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!