Tamilnadu

தமிழ்நாட்டில் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 6 MP-க்கள் பதிவுக் காலம் முடிவு - யார் அவர்கள்?

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் தி.மு.கவை சேர்ந்த எம். சண்முகம், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், பா.ம.க அன்புமணி ராமதாஸ் ஆகிய 6 பேரின் பதிவுக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் இந்த 6 இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும் ஜூன் 12 ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு 159 உறுப்பினர்கள் உள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 75 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் திமுக கூட்டணிக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுக கூட்டணிக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மாநிலங்களவை பதவிக்கு போட்டி நடைபெறும் பட்சத்தில் ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.

Also Read: நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு - தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!