Tamilnadu
”சாதி-மதம்-நிறம் என சிந்திகாத தூய உள்ளங்கள் செவிலியர்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
மருத்துவத்துறையில் செவிலியர்களின் பங்கு மிகவும் அளப்பரியது. நோயாளிகளிடம் கனிவோடும், அன்போடும், பண்போடும் நடந்து கொள்பவர்கள் செவிலியர்கள். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கிக் தவித்த பொது தங்களது உயிரையும் துச்சமென நினைத்து சேவையாற்றினார்கள். இவர்களது சேவையை யாரும் மறக்க முடியாது.
இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உலக செவிலியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் சமூகவலைதள பதிவில், "தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!