Tamilnadu
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு : 95.03% மாணவர்கள் தேர்ச்சி!
தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இப்பணி அண்மையில் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 0.47% கூடுதலாக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
மேலும் தேர்வு எழுதிய 4,19,316 மாணவர்களில் 4,05,472 (96.70%) மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் தேர்வு எழுதிய 3,73,178 மாணவிகளில் 3,47,670 (93.16%) மாணவிகள் தேர்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட 3.54% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல் 2,638 மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் 436 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. ஏதேனும் ஒரு பாடத்தில் 26,887 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதேபோல் 2853 அரசுப் பள்ளி மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு கணினி அறிவியல் பாடத்தில் 9,536 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர். அதேபோல் கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 4,208 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 3,181 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்று அசத்தி இருக்கிறார்கள்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!