Tamilnadu
”கிரிமினல் வேலையில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” : நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு!
எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து, சதுரங்க ஆட்டத்தை ஆடிவருகிறது ஒன்றிய அரசு. இவர்களது கை அசைவுக்கு ஏற்ப ஆளுநர்களும், எதிர்க்கட்சி அரசுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கு பொறுப்பிற்கு வந்ததில் இருந்தே மாநில அரசுக்கு இடைஞ்சலாகவே இருந்து வருகிறார். மேலும் அரசின் செயல்பாடுகளில் நேரடியாக குறுக்கீடு செய்து வருகிறார். உச்சநீதிமன்றம் கூட பலமுறை ஆளுநரை கண்டித்துவிட்டது.
ஆனால் நான் திருந்த மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி பிடிவாதம் பிடித்து வருகிறார். அண்மையில் கூட உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார். இதில், அரசுக்கு எதிராகவும் பேசி வருகிறார்.
இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் கிரிமினல் வேலையில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து இருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ், "உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிய பிறகும் கூட, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தி இருக்கிறார் ஆளுநர். இதில் இருந்தே நமக்கு தெளிவாக தெரிகிறது ஆளுநர் யாருடைய ஆள் என்று. பேச்சிலும், செயலிலுமே அவர் யார் என்பது நமக்கு தெரிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் கிரிமினல் வேலையில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
என்னை நோக்கியும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவிவிடப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவும் சிக்கவில்லை. பா.ஜ.கவை எதிர்ப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்தால் குறைந்து போகட்டும். எனக்கு ஒரு நேர்மை இருக்கிறது. என்னை நான் விற்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!
-
“ஆசிரியர் தினத்தில் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க உறுதிகொள்வோம்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!