Tamilnadu
”அமித்ஷா அருகே மௌன சாமியாக அமர்ந்திருந்த பழனிசாமி” : வைகோ பேட்டி!
அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி வைத்து இருக்கிறார்கள். பா.ஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்ன எடப்பாடிதான் இன்று கூட்டணி வைத்து இருக்கிறார். செங்கோட்டையன், இரண்டு முறை தனியாக ஒன்றிய அமைச்சர் சந்தித்தார். அதேபோல் எடப்பாடியும் டெல்லி சொன்றார். தற்போது அமித்ஷா சென்னை வந்த நிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைகிறது என்றால், அவர் பேசி இருக்க வேண்டாமா? ஆனால் அவர் பேச அனுமதிக்கப்பட வில்லை. அவர் பேச அனுமதித்து இருந்தால் அது கூட்டணியில் ஆரோக்கியமானதாக இருந்து இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி மௌன சாமியாக அமர்ந்திருந்தார்.
இந்த கூட்டணி தொடருமா? என்பது அவர்களுக்கே தெரியாது. நீட், மும்மொழி கொள்கை உள்ளிட்ட விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் காரணத்தில் இக்கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டணி நீடித்தாலும், உடன் சில கட்சிகள் சேர்ந்தாலும் தி.மு.க தலைமையில் உள்ள கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும் .
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
-
திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
5 ஆண்டுகளில் மாபெரும் சாதனை.. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி செல்லும் தமிழ்நாடு!
-
“பா.ஜ.க தொட்டதெல்லாம் பஸ்பமாகிவிடும்; அ.தி.மு.க?” : ப.சிதம்பரம் கடும் விமர்சனம்!
-
பாஜகவின் தொடர் அழுத்தம்.. முதலமைச்சராக பதவியேற்ற 4 மாதங்களில் ராஜினாமா.. நிதிஷின் முடிவால் பீகாரில் பரபர!